விடியல் ஏந்திய வானாய் - பெண் தேகம்,
வின்மீன் சூடிய இரவாய் - மலர் சூடிய கூந்தல்,
துயில் கலைந்த ஆதவன் - நெத்தியில் சிறுப் பொட்டு,
வைகை நதியில் கரும் மீன் - கதகலியாடும் விழிகள்,
ஆழ்கடல் செதுக்கிய முத்துகள் - பலிச்சிடும் அழகுப் பற்கள்,
செம்புரிச் சங்கே உறுப்பாய் ஆனதோ! - கூந்தல் மறைவில் செவிகள்,
செடியில் பூத்தப் பூக்கள் - கரங்களில் உதித்த விரல்கள்,
பூக்களில் மலர்ந்தது பனித்துளிகள் - விரல்களில் அங்கு நகங்கள்,
அன்னம் நடந்த நடை - மண்ணில் பதிந்த கால் தடங்கள்,
காற்றில் தவழ்ந்த ராகங்கள் - திருவாய் உதிர்த்த செம்மொழியோ,
காவியம் எழுத வேண்டுமோ - இவளே பொருளாய் போதுமே...