Monday, October 26, 2009

சிறுவர் பருவம்

துள்ளி விளையாடும் மான்களின் கால்களாய் அந்த பருவம்>>>
பட்டாம்பூச்சியை துரட்டிய அந்த நாட்கள்,
நண்பனிடம் சண்டையிட்ட அந்த நொடி,
பள்ளிக்கு போக மறுத்த அந்த தருணங்கள்,
அப்பாவின் மார்பில் உறங்கிய நினைவுகள்,
கோபத்தில் நடத்திய போராட்டங்கள்,
தோழர்களுடன் செய்த சோட்டைகள் என அப்பருவம்
நாம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பருவமாகும்.
ஒவ்வொருக் காலகட்டத்திலும் அதை நினைத்தால் மனதில் ஆனந்தமே>>>>

Monday, October 19, 2009

<<<<<அவள்>>>>>>

இவள் கருவிழி ஆயிரம் கவி பேசும்,
அதை கவியாய் செதுக்க கம்பன் இங்கில்லை....
பசுமையின் அடையாளமாய் அவளின் சிவந்த உதடுகள்,
அங்கு எக்காலமும் சிரிப்பு என்ற பூ உதிர்கின்றதே!!!
இவளைச் சிலையாய் செதுக்க சோழர் கால சிற்பியே உயிர்பித்து வரவேண்டும்.
இவளைக் கவியாய் வடிக்க கம்பன் மீண்டும் பிறந்து வரவேண்டும்.
இவளை இலக்கியப்படுத்த வால்மிகியும் வாலியும் கூட்டுச் சேர வேண்டும்.
அன்று மேனகையின் கால்களில் விழுந்தான் விசுவாமித்திரன்
இன்று உன்னடியில் விழுந்தான் உன் "விசுவாச"மித்திரன்.