மனிதனின் படைப்பு; இறைவன் வரைந்த சித்திரம்,
மனிதர்கள் பல வர்ணம், குணம், திறன், வடிவங்களை
கொண்டிருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதானே!!
வலித்தால் அழுவான்,
மகிழ்ந்தால் சிரிப்பான்,
காதலித்தால்?
அழுதுக் கொண்டே சிரிப்பான் மனிதன்...
மூளையில் இருபக்கம் போல்
காதலுக்கும் இன்பம், துன்பம் என இருபக்கம்.
அமைதியாய் இரு ஞானியாவாய்,
மகிழ்ச்சியாய் இரு இளமையாவாய்..
காதலித்திரு இளமையில் நீ ஞானியாவாய்.
வள்ளுவனின் காதல் காவியத்தில்
அமராவதியின் காதல் கல்லரையில்
மண்ணில் கரைந்தாலும் நினைவில் உயிர்
வாழ்வது காதல் மட்டுமே!!
நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் போல்
காதலையும் கட்டுக்குள்,
அடைக்க முடியாது; அடக்கவும் முடியாது..
பிரபஞ்சத்தில் மறைந்து வாழும் ஆறாம் பூதம் காதல்தான்...
அணுவிலிருந்து உதித்தவன் மனிதன்,
எதிலிருந்து உதித்தது காதல்?
அன்பே சிவம் என்று கூறுவது இதைத்தானோ???
இறைவன்=காதல்
ம்ம்...இல்லை!! இல்லை!! நாத்திகன் இதை எதிர்ப்பானே!!
பிறகு காதலின் பிறப்பை எப்படி அறிவது; கூறுவது?
ஹொர்மோனின் சூழ்ச்சி என்கிறான் நாத்திகவாதி..
எது எப்படியோ காதல் உணர்வதற்கு மட்டுமே விமர்சிக்கப்படுவதற்கல்ல...
காதலின் அவதாரங்கள் பல..
ஆண் பெண் கொண்டது மட்டுமல்ல காதல்..
தகப்பன் மகன் உணர்விலும் வாழும் காதல்...
பெற்ற பந்தங்களை கடந்து
உற்ற நண்பன் வரை தொடரும்...
உறவுகள் என்றும் நம்மை தொடர்வதில்லை...
மனிதர்கள் மேல் நாம் கொண்ட அன்பே நம்மை கடைசி வரை
சூழ்ந்து வரும்..வாழும் காலத்தில் நீ மக்களின் மனதில்
விதைத்த அன்பின் விதையே!!
உன் கடைசி தருணத்தில் கண்ணீராய் சிந்தப்படும்....
Tuesday, December 7, 2010
Tuesday, June 22, 2010
இன்று உன் இறுதி நாள்!!!!
பூவும் மனிதனும் ஒன்றுதான்!
இன்று இறுதி நாள் என்று தெரிந்தால்
பூவும் வதங்கியே மலரும்...(மலருமா?)
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
காலையில் விழித்தவன் விழித்தவன் தான்..
உனை சூழ்ந்திருக்கும் வானம், காற்று, நீர், நெருப்பு, மண்
யாவும் சூன்யப்படும்.
புவியில் நீ மட்டும் தனிமை சிலுவை அரையப்படுவாய்!
பசித்தும் புசிக்க மறந்திருப்பாய்,
விழித்தே நீ உறங்கிருப்பாய்,
அருந்தும் சலமும் நஞ்ஜென உணர்ந்திருப்பாய்,
ஏன் சுவாசிக்கவே வெறுத்திருப்பாய்.
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
நண்பனும் அந்நியப்படுவான்,
உடன் பிறப்புகள் பெயர் மறப்பாய்,
தாய் தந்தையின் கைப்பிடி தளர்வதாய் உணர்வாய்!!!
அன்று மட்டும் வாழ்வை அதிகம் வெறுத்திருப்பாய்,
இன்னும் ஒருநாள் வாழத் துடித்திருப்பாய்...
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
ஆத்திகனா நீ நாத்திகன் ஆவாய்,
நாத்திகனா நீ ஆத்திகன் ஆவாய்.
கடவுள் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அன்றுதான்...
நீ கண்ணிமைக்கும் கணங்களை எண்ணியிருப்பாய்,
உன் கண் மயிர் உதிர்வதையும் கணக்கெடுப்பாய்...
சிறு ஒசைக் கேட்டு அதிர்ந்திருப்பாய்
நித்தம் ஒரு கணம் இறந்திருப்பாய்....
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
இறப்பு உனக்கு இயல்புதான்
அந்த நாள் தெரியாதவரை.....
இன்று இறுதி நாள் என்று தெரிந்தால்
பூவும் வதங்கியே மலரும்...(மலருமா?)
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
காலையில் விழித்தவன் விழித்தவன் தான்..
உனை சூழ்ந்திருக்கும் வானம், காற்று, நீர், நெருப்பு, மண்
யாவும் சூன்யப்படும்.
புவியில் நீ மட்டும் தனிமை சிலுவை அரையப்படுவாய்!
பசித்தும் புசிக்க மறந்திருப்பாய்,
விழித்தே நீ உறங்கிருப்பாய்,
அருந்தும் சலமும் நஞ்ஜென உணர்ந்திருப்பாய்,
ஏன் சுவாசிக்கவே வெறுத்திருப்பாய்.
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
நண்பனும் அந்நியப்படுவான்,
உடன் பிறப்புகள் பெயர் மறப்பாய்,
தாய் தந்தையின் கைப்பிடி தளர்வதாய் உணர்வாய்!!!
அன்று மட்டும் வாழ்வை அதிகம் வெறுத்திருப்பாய்,
இன்னும் ஒருநாள் வாழத் துடித்திருப்பாய்...
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
ஆத்திகனா நீ நாத்திகன் ஆவாய்,
நாத்திகனா நீ ஆத்திகன் ஆவாய்.
கடவுள் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அன்றுதான்...
நீ கண்ணிமைக்கும் கணங்களை எண்ணியிருப்பாய்,
உன் கண் மயிர் உதிர்வதையும் கணக்கெடுப்பாய்...
சிறு ஒசைக் கேட்டு அதிர்ந்திருப்பாய்
நித்தம் ஒரு கணம் இறந்திருப்பாய்....
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
இறப்பு உனக்கு இயல்புதான்
அந்த நாள் தெரியாதவரை.....
Wednesday, June 9, 2010
கல்லரை
நம் கல்லரையில் விழுந்த கடைசி
பூவும் நம் கதை சொல்லுமே!!
மரபணுவில் உதித்து கல்லரையில்
தானடா தஞ்சம்!!
வாழ்வில் நமக்கென்ன பஞ்சம்?
வேண்டுமடா சிந்தனையில்
சில விருச்சம்.....
உன் பிறந்த நாளில் நிறைய சிரித்தாய்
ஏனடா அழ மறுத்தாய்?
பிறந்த நாள் உன் இறந்தக் காலம்,
இறப்பு நாள் உன் எதிர்க்காலம்.
இறப்பை நோக்கியே நம் பயணம்..
அணுதினமும் வாழ்வில் சோதனைகள் ஆயிரம்,
சிரித்தால் போய்விடும்,
"வள்ளுவன்" வாக்கு பொய்க்காது,
உணர்ந்தவன் வாழ்க்கை அழியாது...
பஞ்சணையில் உறக்கம்
பெண்ணனைக்க ஏக்கம்,
என நிலைக்கெட்டு நீயும் திரியாதே!
பிறர் பழிக்க நீ வாழாதே!!!
கணக்கு ஒன்று உள்ளதே,
அது காலத்தின் கையில் இருக்குதே,
விடைப்பெறும் நேரம் வரும் போது
உன் கணக்குகள் இங்கு தீருதே!!!
உன் கல்லரையில் உதிரும் கடைசிப் பூவிதலும் உன் கதை சொல்லும்...
பூவும் நம் கதை சொல்லுமே!!
மரபணுவில் உதித்து கல்லரையில்
தானடா தஞ்சம்!!
வாழ்வில் நமக்கென்ன பஞ்சம்?
வேண்டுமடா சிந்தனையில்
சில விருச்சம்.....
உன் பிறந்த நாளில் நிறைய சிரித்தாய்
ஏனடா அழ மறுத்தாய்?
பிறந்த நாள் உன் இறந்தக் காலம்,
இறப்பு நாள் உன் எதிர்க்காலம்.
இறப்பை நோக்கியே நம் பயணம்..
அணுதினமும் வாழ்வில் சோதனைகள் ஆயிரம்,
சிரித்தால் போய்விடும்,
"வள்ளுவன்" வாக்கு பொய்க்காது,
உணர்ந்தவன் வாழ்க்கை அழியாது...
பஞ்சணையில் உறக்கம்
பெண்ணனைக்க ஏக்கம்,
என நிலைக்கெட்டு நீயும் திரியாதே!
பிறர் பழிக்க நீ வாழாதே!!!
கணக்கு ஒன்று உள்ளதே,
அது காலத்தின் கையில் இருக்குதே,
விடைப்பெறும் நேரம் வரும் போது
உன் கணக்குகள் இங்கு தீருதே!!!
உன் கல்லரையில் உதிரும் கடைசிப் பூவிதலும் உன் கதை சொல்லும்...
Sunday, May 16, 2010
நடிப்பு
இயல்பாய் வாழ மறந்தோம்,
நித்தம் ஒரு கணம் நடித்தோம்,
மனதில் நஞ்சை விதைத்தோம்,
தீமைகள் செய்ய துணிந்தோம்,
காலம் ஒரு நாள் மாறும்.
காலனின் அழைப்பு வரும்
அன்று உன் கல்லரையில்
சாப மாலைகள் சூடப்படும்...
இன்றே உன் மாலைகளை எடைப்போடு..
நித்தம் ஒரு கணம் நடித்தோம்,
மனதில் நஞ்சை விதைத்தோம்,
தீமைகள் செய்ய துணிந்தோம்,
காலம் ஒரு நாள் மாறும்.
காலனின் அழைப்பு வரும்
அன்று உன் கல்லரையில்
சாப மாலைகள் சூடப்படும்...
இன்றே உன் மாலைகளை எடைப்போடு..
கடைசிக் காலம்
பிறக்கும் போது சிரிக்க வைத்தவன் மனிதன்...
போகும் போது சிரிக்க வைக்காதவனும் மனிதன்..
காலத்தின் கணக்கில் கேள்விக்குறியாய் பிறந்தோம்.
நேரம் வந்தபின் முற்றுப் புள்ளியாய் மறைந்தோம்..
கேள்விக்குறி வாழ்க்கைக்கு நீ தரும் பதில்,
உன் இறப்பன்று தெரியும்..சிந்தும் கண்ணிர்களே!!!
மண்ணில் நீ தஞ்சமிக்கும் போது
மக்களின் மனதிலும் தஞ்சமிக்க வேண்டும்..
விதை மண்ணில் புதைந்தாலும்,
விருட்சம் விண்ணை தொடுகிறதே!!!
மனிதா!!!
நீ செல்லும் வாழ்க்கைப் பாதையில்
வைக்கும் ஒவ்வொரு அடியும்..நிலத்தில் மட்டுமல்ல,
மனதிலும் தடம் பதிக்க வேண்டும்..
போகும் போது சிரிக்க வைக்காதவனும் மனிதன்..
காலத்தின் கணக்கில் கேள்விக்குறியாய் பிறந்தோம்.
நேரம் வந்தபின் முற்றுப் புள்ளியாய் மறைந்தோம்..
கேள்விக்குறி வாழ்க்கைக்கு நீ தரும் பதில்,
உன் இறப்பன்று தெரியும்..சிந்தும் கண்ணிர்களே!!!
மண்ணில் நீ தஞ்சமிக்கும் போது
மக்களின் மனதிலும் தஞ்சமிக்க வேண்டும்..
விதை மண்ணில் புதைந்தாலும்,
விருட்சம் விண்ணை தொடுகிறதே!!!
மனிதா!!!
நீ செல்லும் வாழ்க்கைப் பாதையில்
வைக்கும் ஒவ்வொரு அடியும்..நிலத்தில் மட்டுமல்ல,
மனதிலும் தடம் பதிக்க வேண்டும்..
Friday, May 14, 2010
திரைபடம்
தமிழா!!!
விடிந்தால் ஆதவனையா கண்டாய்!!!
படத்தின் மிதல்லவா மோகம் கொண்டாய்!!
உறக்கத்தில் கனவில் மிதந்தாய்,
விடிந்தும் ஏனடா படக்கனவில் மிதந்தாய்...
நண்பா!!
வெள்ளி தோறும் கோவில் போன காலம் போனதே,
வெள்ளியிலும் வெள்ளித்திரை உனை சூழ்ந்ததே!!!
வன்முறை கலாச்சாரம் எங்கு கற்றாய்?
தமிழ்படத்தில் தானடா கண்டாய்...
தோழா!!!
ஆயிரம் படைகளுடன் சூழ நீ நாயகன் அல்ல...
நாயகன் மயக்கத்தில் இருந்தால் உன் வீட்டில் சோறு இல்ல...
உன் பொழுதைப் போக்கத் தான் படம்....
உன் பொழுதையே போக்க அல்ல...
விடிந்தால் ஆதவனையா கண்டாய்!!!
படத்தின் மிதல்லவா மோகம் கொண்டாய்!!
உறக்கத்தில் கனவில் மிதந்தாய்,
விடிந்தும் ஏனடா படக்கனவில் மிதந்தாய்...
நண்பா!!
வெள்ளி தோறும் கோவில் போன காலம் போனதே,
வெள்ளியிலும் வெள்ளித்திரை உனை சூழ்ந்ததே!!!
வன்முறை கலாச்சாரம் எங்கு கற்றாய்?
தமிழ்படத்தில் தானடா கண்டாய்...
தோழா!!!
ஆயிரம் படைகளுடன் சூழ நீ நாயகன் அல்ல...
நாயகன் மயக்கத்தில் இருந்தால் உன் வீட்டில் சோறு இல்ல...
உன் பொழுதைப் போக்கத் தான் படம்....
உன் பொழுதையே போக்க அல்ல...
Sunday, April 25, 2010
புதிய தருணம்
இன்னும் ஒரு நாள் வேண்டும், வாழ்வை ரசிக்க
இன்னும் ஒரு நாள் வேண்டும்..
இன்று எனும் வெயிலில் உறங்கி
நாளை என்ற நிழலை விளக்க வேண்டும்...
நான் மீண்டும் ஒரு முறை அன்னையின் மடியில் உறங்க வேண்டும்...
சிரித்து கொண்டு பிறக்கும் பூவைப் போல் நித்தம் துயில் களைய வேண்டும்...
மனிதன் என்ற போர்வையில் மிருகமாகிறோம்..
இன்று மிருகம் அடங்கி மனிதன் மிளிர வேண்டும்...
கண்ணில் தெளிவு, வாக்கில் சுத்தம்,
நம் நடையில் வேகம் வெளிப்பட வேண்டும்..
நாளைய உலகம் நம் வசப்பட வேண்டும்..
வானத்தில் தங்க மீன் அது விண்மீன் தானே!!!
வின்மீன் என்று குறைத்து மதிப்பிடதே நண்பா!!
ஒவ்வொன்றும் சூரியனே!!!!!
இன்னும் ஒரு நாள் வேண்டும்..
இன்று எனும் வெயிலில் உறங்கி
நாளை என்ற நிழலை விளக்க வேண்டும்...
நான் மீண்டும் ஒரு முறை அன்னையின் மடியில் உறங்க வேண்டும்...
சிரித்து கொண்டு பிறக்கும் பூவைப் போல் நித்தம் துயில் களைய வேண்டும்...
மனிதன் என்ற போர்வையில் மிருகமாகிறோம்..
இன்று மிருகம் அடங்கி மனிதன் மிளிர வேண்டும்...
கண்ணில் தெளிவு, வாக்கில் சுத்தம்,
நம் நடையில் வேகம் வெளிப்பட வேண்டும்..
நாளைய உலகம் நம் வசப்பட வேண்டும்..
வானத்தில் தங்க மீன் அது விண்மீன் தானே!!!
வின்மீன் என்று குறைத்து மதிப்பிடதே நண்பா!!
ஒவ்வொன்றும் சூரியனே!!!!!
Tuesday, March 16, 2010
என் இமை
மரம் காற்றை தேடுதே,
விதை மண்ணை தேடுதே,
இரவு நிலவைத் தேடுதே,
மழலை தாயைத் தேடுதே,
உனை நித்தம் காணவே,
என் இமை உன்னைத் தேடுதே!!!
விதை மண்ணை தேடுதே,
இரவு நிலவைத் தேடுதே,
மழலை தாயைத் தேடுதே,
உனை நித்தம் காணவே,
என் இமை உன்னைத் தேடுதே!!!
Subscribe to:
Posts (Atom)