Friday, November 13, 2009

<<<<சுவாசம்>>>>>

தென்றலாய் வந்தாய் என் சுவாசத்தில் கலந்தாய்
நான் உணரும் முன்னே காற்றில் மறைந்தாய்.
நீ என்று தெரிந்தால் சுவாசிக்க மறந்திருப்பேன்,
உன்னை என் சுவாசக் குழாயில் அடைத்திருப்பேன்.
நான் சென்ற பின்னே நீ போக வேண்டும்,
உயிர் பிரிந்த பின்னும் இதயம் துடிக்குமடி....

Monday, November 9, 2009

பெண்ணே!!!!!!

என் இமைகள் இமைக்க மறுக்குதடி,
நான் உன்னை கண்ட அந்த நொடி.
இயற்கை மடியில் படுத்துக்கொண்டு
வின்மீன் ரசிக்க தொனுதடி.
இனி மரணம் என்னை அனைத்தாலும்
உன் மடி தஞ்சம் வேண்டுமடி.....

Tuesday, November 3, 2009

<<<<<<காதல்>>>>>>>

ஒன்றில் தோன்றி ஒன்றில் மடிவதில்லை காதல்.
உன்னில் தோன்றி என்னில் பிறப்பெடுக்கும்.
அன்னை மடியில் தொடங்கி கல்லரை
வரை உன்னை தொடரும்.
பூவில் வாசம் போல் உன்னில் ஒழிந்திருக்கும்.
உன் கண் வழி எட்டிப் பார்க்கும்.
சில நேரம் கண்ணிரில் வெளிப்படும்,
உருவமின்றி உலகை ஆழும் இந்த சர்வாதிகாரி>>>>

Sunday, November 1, 2009

((((((இயற்கை)))))))

தான் தோன்றி என்பதே இயற்கை..
சிற்பிகள் செதுக்காத சிற்பங்களே இயற்கை..
மனிதர்களின் முதல் ஆசான் இயற்கை..
கடவுள் இருப்பது உறுதியில்லை,
இருந்தால் அவனின் உயர்ந்த படைப்பே இயற்கை..
பொறுத்தாலும் உயிரே இயற்கை..
மனிதனின் அன்றாட உபயமே இயற்கை..

Monday, October 26, 2009

சிறுவர் பருவம்

துள்ளி விளையாடும் மான்களின் கால்களாய் அந்த பருவம்>>>
பட்டாம்பூச்சியை துரட்டிய அந்த நாட்கள்,
நண்பனிடம் சண்டையிட்ட அந்த நொடி,
பள்ளிக்கு போக மறுத்த அந்த தருணங்கள்,
அப்பாவின் மார்பில் உறங்கிய நினைவுகள்,
கோபத்தில் நடத்திய போராட்டங்கள்,
தோழர்களுடன் செய்த சோட்டைகள் என அப்பருவம்
நாம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பருவமாகும்.
ஒவ்வொருக் காலகட்டத்திலும் அதை நினைத்தால் மனதில் ஆனந்தமே>>>>

Monday, October 19, 2009

<<<<<அவள்>>>>>>

இவள் கருவிழி ஆயிரம் கவி பேசும்,
அதை கவியாய் செதுக்க கம்பன் இங்கில்லை....
பசுமையின் அடையாளமாய் அவளின் சிவந்த உதடுகள்,
அங்கு எக்காலமும் சிரிப்பு என்ற பூ உதிர்கின்றதே!!!
இவளைச் சிலையாய் செதுக்க சோழர் கால சிற்பியே உயிர்பித்து வரவேண்டும்.
இவளைக் கவியாய் வடிக்க கம்பன் மீண்டும் பிறந்து வரவேண்டும்.
இவளை இலக்கியப்படுத்த வால்மிகியும் வாலியும் கூட்டுச் சேர வேண்டும்.
அன்று மேனகையின் கால்களில் விழுந்தான் விசுவாமித்திரன்
இன்று உன்னடியில் விழுந்தான் உன் "விசுவாச"மித்திரன்.

Tuesday, July 21, 2009

அன்றோரு மாலை....

அன்றோரு மாலை இளம் வெயில் நேரம்...
என்னோடு அவளும் இருந்த காலம்
மனதில் அணுகுண்டு வெடிச்ச தருணம்
தென்றல் வந்து என்னை வருடியதே....

என்னோடு அவளும் பேசிய கணமே
மனதில் இயற்கை ஆசி தருமே
மீண்டும் அவளை பார்க்கும் வரமே
வேண்டும் என மனதும் ஏங்கியதே..

அவளை பிரியும் நேரம் வருமே
கண்கள் தானாய் மெல்ல கலங்கும்
அவளை பிரியும் ஒவ்வொரு நொடியும்
உயிரும் மெல்ல உருகி வடிகிறதே....

அவளுடன் சேரும் நேரம் வருமே
தொலைவில் இல்லை கண்களில் தெரியும்.
அந்த நேரம் வருகிற வரையில்
உனக்கென காத்திருப்பேன்....

Sunday, June 7, 2009

தத்தை

அந்தி வானை தன் வண்ண சிறகுகளால்
வர்ணம் தீட்டும் கிளிகளல்ல...
என் இருண்ட வாழ்வை தன் வரவால்
மாற்றியமைத்த தமக்கை..
இவளின் வருகை வசந்தத்தின் அடையாளமே..
என் முகத்தில் "சிரிப்பு" என்ற பூ பூப்பதால்..

Thursday, June 4, 2009

மறத்தமிழனா? மரத்தமிழனா?

தமிழ் மெல்ல அழியும் என்றான் ஒருவன்..
அங்கு தமிழனே அழிகிறான், தமிழ் அழியாதா?
உண்மையில் நாம் மறத்தமிழர் அல்ல மரத்தமிழரே!
அன்று பாஞ்ஜாலிக்கு உதவாதவர்களை மரங்கள் என்றார்கள்.
இன்று நமக்கும் அதே நிலைமைதான்,
உயிர் உள்ள பொம்மைகளாய் அசைவற்ற நிலையில்..

தமிழீழம்

தமிழர்களின் ஒரே கனவு...

தமிழுக்கென ஒரு நாடு
தமிழுக்கென ஒரு அரசு
தமிழுக்கென ஒரு இனம்
தமிழ் பேசும் மக்கள்

என எங்கும் தமிழ் வாசம்,
அத்தேசம் முழுவதும் வீசும்

விடுதலை

விடுதலை தேசத்தில் விடுதலைக்காக போராட்டம்.
தொடங்கிய போராட்டம் ஓய்வது எப்போ?
மண்ணுக்கு உரமாய் தமிழனின் உதிரம்,
தமிழனின் அழிவே சிங்களத்தின் தாரக மந்திரம்.
இந்நிலை மாறுவது எப்போ?
காற்றில் அங்கு உதிர வாடை,
எத்திசையிலும் தமிழனின் மரண ஓலை..
இவ்விரண்டு அடங்குவது எப்போ?

இவையனைத்தும் ஓரு நாள் தீறும்,
அன்று தமிழீழம் வென்றிருக்கும்.
புலிகளின் தாகம், தமிழீழம் தாயகம்

Thursday, April 2, 2009

கடவுள்

கடவுள் இவ்வுலகில் பிறந்த அனைவரிடமும்
எப்போதும் கூடவே இருக்கின்றார்.
அதை உணராதவன் எங்கே என்கிறான்??
உணர்ந்தவன் நண்பன் என்கின்றான்..

வசந்தம்

தென்றல் வரும் வழியை
பூக்களும் அறியாது..
அதே போல் நீ என் வாழ்வில் வந்த வழியை
என்னால் அறிய முடியவில்லை..
நீ வந்த பின் என் மனம் என்னும் நந்தவனத்தில்
என்றும் வசந்த காலமே....
இந்த வசந்தம் நிலைக்குமா??????

ஆழம்

ஆழம் அறியாமல் காலை விடதே
என்றார்கள்
ஆனால் நான் உன் பாசத்தின் ஆழம்
பார்க்கவே உன்னில் என்னை
வைத்தேன்......

தெரியும்

பூவை உலகிற்கு தரும்
செடிக்கு தெரியும்..
நிலவை பிரசவிக்கும்
இரவுக்கு தெரியும்...
வாசத்தை அள்ளி வரும்
தென்றலுக்கு தெரியும்...
இவை யாவும் நிரந்தரமில்லை என்று
இருந்தும் தங்கள் கடமையை செய்கின்றன.
மனிதனே நீயும் பலனை எதிர்பாராமல்
உன் கடமையை செய்!!!!!!

தூரல்

சின்ன தூரல்கள் ஒன்று சேர்ந்துதான்
ஆழக் கடலேன மாறும்....
தூரல்கள் சேரவில்லை என்றால்
வங்க கடலுமே காயும்...
நானும் கடல் தான்
உன் நட்பு எனும் தூரல்களால்
நிறைந்து வழிகின்றேன்....

Saturday, February 28, 2009

பிரிவு

மனிதனுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கும்
மண்ணில் வாழும் போதே விதிக்கப் பட்ட
மரண தண்டனை.

உடலை விட்டு உயிர் பிரிவது போல்
நட்புகள் உடைவதும் காலத்தின் கட்டாயங்களே!!

இதுவிட்டுச் செல்லும் கண்ணிர் தடங்கள்
கல்வெட்டுக்கள் போல் அழியா வரம் பெற்றவை.......

வாழ்கை

வாழ்வில் துன்பங்கள் பல வரலாம்...
அது இயற்கை..அதே போல் அவப்போது
நமக்கு பல சோதனைகளும் வரலாம்...
அதைக் கண்டு மனம் தளருபவன் மண்ணில்
மடிகிறான்..எதிர்த்து போராடுபவன் விண்ணை
தொடுகிறான்.......