விடியல் ஏந்திய வானாய் - பெண் தேகம்,
வின்மீன் சூடிய இரவாய் - மலர் சூடிய கூந்தல்,
துயில் கலைந்த ஆதவன் - நெத்தியில் சிறுப் பொட்டு,
வைகை நதியில் கரும் மீன் - கதகலியாடும் விழிகள்,
ஆழ்கடல் செதுக்கிய முத்துகள் - பலிச்சிடும் அழகுப் பற்கள்,
செம்புரிச் சங்கே உறுப்பாய் ஆனதோ! - கூந்தல் மறைவில் செவிகள்,
செடியில் பூத்தப் பூக்கள் - கரங்களில் உதித்த விரல்கள்,
பூக்களில் மலர்ந்தது பனித்துளிகள் - விரல்களில் அங்கு நகங்கள்,
அன்னம் நடந்த நடை - மண்ணில் பதிந்த கால் தடங்கள்,
காற்றில் தவழ்ந்த ராகங்கள் - திருவாய் உதிர்த்த செம்மொழியோ,
காவியம் எழுத வேண்டுமோ - இவளே பொருளாய் போதுமே...
Friday, September 23, 2011
Saturday, February 5, 2011
♥♥காதல்♥♥
வேதியன் ஆன பரம்பொருளின் இனம்!!!
உயிரினம் வாழ வழிவகுக்கும் உணர்வு!
மேன்மை பெற்று மானுடம் கையில் சிக்கிய பொக்கிஷம்....
கண்கள் பிரசவிக்கும் வலியான குழந்தை இந்தக் காதல்....
கண்களின் கரும்பாதையில் தொடங்கி...
உன் ஒவ்வொரு அணுக்களுக்கும் விலாசம் தரும் தபால்காரன்...
கண்கள் எனும் வழியில்,
நெஞ்சுக் குழியில்,
இதயம் எனும் சமவெளியில்...
வறண்ட மனதிலும் கள்ளிப் பூவாய் பூக்குமே இக்காதல்....
மூவாறு வயதில் அழையா நண்பனவன்...
நீ தடுத்தாலும்,
எட்டி உதைத்தாலும்,
இடம் தர மறுத்தாலும்
கண்கள் எனும் திண்ணையில் ஒய்யாரமாய் கண்ணுரங்கும்...
நீ கண்ணயரும் நேரத்தில் உன் நெஞ்சில் குடிபுகுமே இக்காதல்...
நம்பிக்கையின் விருட்சம் தான் காதல்..
இன்று துளிர்த்து, நாளை மொட்டவிழ்ந்து பிறகு வதங்குவதற்கு காதல்,
பூந்தோட்டமல்ல...நம் மனதின் தூங்காநகரம்...
உன் சரிரம் மண்ணில் சரியும் பொழுதும்
கம்பிரமாய் நிற்குமடா நீ எழுப்பிய காதல் கோட்டை....
மனிதனின் செயல்கள் இருவகை..
ஒன்று வேகம் ; ஒன்று விவேகம்...
மனிதனின் வாழ்க்கையும் இருவகை..
ஒன்று களவு ; ஒன்று கற்பு...
கற்பில் வெல்ல நீ களவை வெல்ல வேண்டும்...
களவில் வெல்ல உனக்கு (வி)வேகம் வேண்டும்...
காதல் வேறு ; ஈர்ப்பு வேறு, அதை நீயரிய வேண்டும்...
கண்டறிந்த பின்னரே நீ காதல் செய்ய வேண்டும்...
உன் கைப்பற்றி,
உன் தோல்ச் சாய்ந்து,
உன் சுவாச வெப்பத்தில் குளிர்க் காயுமே உண்மைக் காதல்...
உன் எண்ணமாய் அவள்,
அவள் செயலாய் நீ...
ஆதிசிவன் அம்சமாய் மண்ணில் இக்காதல்......
உயிரினம் வாழ வழிவகுக்கும் உணர்வு!
மேன்மை பெற்று மானுடம் கையில் சிக்கிய பொக்கிஷம்....
கண்கள் பிரசவிக்கும் வலியான குழந்தை இந்தக் காதல்....
கண்களின் கரும்பாதையில் தொடங்கி...
உன் ஒவ்வொரு அணுக்களுக்கும் விலாசம் தரும் தபால்காரன்...
கண்கள் எனும் வழியில்,
நெஞ்சுக் குழியில்,
இதயம் எனும் சமவெளியில்...
வறண்ட மனதிலும் கள்ளிப் பூவாய் பூக்குமே இக்காதல்....
மூவாறு வயதில் அழையா நண்பனவன்...
நீ தடுத்தாலும்,
எட்டி உதைத்தாலும்,
இடம் தர மறுத்தாலும்
கண்கள் எனும் திண்ணையில் ஒய்யாரமாய் கண்ணுரங்கும்...
நீ கண்ணயரும் நேரத்தில் உன் நெஞ்சில் குடிபுகுமே இக்காதல்...
நம்பிக்கையின் விருட்சம் தான் காதல்..
இன்று துளிர்த்து, நாளை மொட்டவிழ்ந்து பிறகு வதங்குவதற்கு காதல்,
பூந்தோட்டமல்ல...நம் மனதின் தூங்காநகரம்...
உன் சரிரம் மண்ணில் சரியும் பொழுதும்
கம்பிரமாய் நிற்குமடா நீ எழுப்பிய காதல் கோட்டை....
மனிதனின் செயல்கள் இருவகை..
ஒன்று வேகம் ; ஒன்று விவேகம்...
மனிதனின் வாழ்க்கையும் இருவகை..
ஒன்று களவு ; ஒன்று கற்பு...
கற்பில் வெல்ல நீ களவை வெல்ல வேண்டும்...
களவில் வெல்ல உனக்கு (வி)வேகம் வேண்டும்...
காதல் வேறு ; ஈர்ப்பு வேறு, அதை நீயரிய வேண்டும்...
கண்டறிந்த பின்னரே நீ காதல் செய்ய வேண்டும்...
உன் கைப்பற்றி,
உன் தோல்ச் சாய்ந்து,
உன் சுவாச வெப்பத்தில் குளிர்க் காயுமே உண்மைக் காதல்...
உன் எண்ணமாய் அவள்,
அவள் செயலாய் நீ...
ஆதிசிவன் அம்சமாய் மண்ணில் இக்காதல்......
Thursday, January 13, 2011
பாலைவனத்து பூறாக்கள்
போர்க் களத்தில் சில பூக்கள்..
சப்தத்தில் இன்றொரு நிசப்தம்...
ஒன்றாய் நடந்த போது செவிக்குப் புரியாத வார்த்தைகள்..
தனிமையில் இன்றுனக்கு விளங்கும்...செவிகள் கேட்க துடிக்கும்...
சிற்பிக்குள் முத்தைப் போல் நெஞ்சத்தில் எண்ணங்கள்...
சிற்பிகள் தானாய் திறப்பதில்லை...எண்ணங்களும் புரிவதில்லை...
ஊமையின் தோழி பெண் - பெண்கள் சொல்வதில்லை..
பித்தனின் நண்பன் ஆண் - ஆண்கள் நிலையிலில்லை...
ஒன்றாய் இருந்தும் தூரத்தில் அவன்...
அறிந்தும் புரியாமல் அவள்...
பாலைவனத்து புறாக்கள் அவர்கள்..
பிரிக்கும் கள்ளிச் செடிகள் அவர்களைச் சுற்றி...
தனிமையின் வாசலில் தன்னந்தனியே ஒருவன்...
வாழ்க்கையின் சூழ்ச்சியின் குழப்பத்தில் ஒருவள்..
வட்டம் போல் சிலவற்றிற்குத் தொடக்கமே முடிவாய்.....
சப்தத்தில் இன்றொரு நிசப்தம்...
ஒன்றாய் நடந்த போது செவிக்குப் புரியாத வார்த்தைகள்..
தனிமையில் இன்றுனக்கு விளங்கும்...செவிகள் கேட்க துடிக்கும்...
சிற்பிக்குள் முத்தைப் போல் நெஞ்சத்தில் எண்ணங்கள்...
சிற்பிகள் தானாய் திறப்பதில்லை...எண்ணங்களும் புரிவதில்லை...
ஊமையின் தோழி பெண் - பெண்கள் சொல்வதில்லை..
பித்தனின் நண்பன் ஆண் - ஆண்கள் நிலையிலில்லை...
ஒன்றாய் இருந்தும் தூரத்தில் அவன்...
அறிந்தும் புரியாமல் அவள்...
பாலைவனத்து புறாக்கள் அவர்கள்..
பிரிக்கும் கள்ளிச் செடிகள் அவர்களைச் சுற்றி...
தனிமையின் வாசலில் தன்னந்தனியே ஒருவன்...
வாழ்க்கையின் சூழ்ச்சியின் குழப்பத்தில் ஒருவள்..
வட்டம் போல் சிலவற்றிற்குத் தொடக்கமே முடிவாய்.....
Subscribe to:
Posts (Atom)