Thursday, April 2, 2009

கடவுள்

கடவுள் இவ்வுலகில் பிறந்த அனைவரிடமும்
எப்போதும் கூடவே இருக்கின்றார்.
அதை உணராதவன் எங்கே என்கிறான்??
உணர்ந்தவன் நண்பன் என்கின்றான்..

வசந்தம்

தென்றல் வரும் வழியை
பூக்களும் அறியாது..
அதே போல் நீ என் வாழ்வில் வந்த வழியை
என்னால் அறிய முடியவில்லை..
நீ வந்த பின் என் மனம் என்னும் நந்தவனத்தில்
என்றும் வசந்த காலமே....
இந்த வசந்தம் நிலைக்குமா??????

ஆழம்

ஆழம் அறியாமல் காலை விடதே
என்றார்கள்
ஆனால் நான் உன் பாசத்தின் ஆழம்
பார்க்கவே உன்னில் என்னை
வைத்தேன்......

தெரியும்

பூவை உலகிற்கு தரும்
செடிக்கு தெரியும்..
நிலவை பிரசவிக்கும்
இரவுக்கு தெரியும்...
வாசத்தை அள்ளி வரும்
தென்றலுக்கு தெரியும்...
இவை யாவும் நிரந்தரமில்லை என்று
இருந்தும் தங்கள் கடமையை செய்கின்றன.
மனிதனே நீயும் பலனை எதிர்பாராமல்
உன் கடமையை செய்!!!!!!

தூரல்

சின்ன தூரல்கள் ஒன்று சேர்ந்துதான்
ஆழக் கடலேன மாறும்....
தூரல்கள் சேரவில்லை என்றால்
வங்க கடலுமே காயும்...
நானும் கடல் தான்
உன் நட்பு எனும் தூரல்களால்
நிறைந்து வழிகின்றேன்....