போர்க் களத்தில் சில பூக்கள்..
சப்தத்தில் இன்றொரு நிசப்தம்...
ஒன்றாய் நடந்த போது செவிக்குப் புரியாத வார்த்தைகள்..
தனிமையில் இன்றுனக்கு விளங்கும்...செவிகள் கேட்க துடிக்கும்...
சிற்பிக்குள் முத்தைப் போல் நெஞ்சத்தில் எண்ணங்கள்...
சிற்பிகள் தானாய் திறப்பதில்லை...எண்ணங்களும் புரிவதில்லை...
ஊமையின் தோழி பெண் - பெண்கள் சொல்வதில்லை..
பித்தனின் நண்பன் ஆண் - ஆண்கள் நிலையிலில்லை...
ஒன்றாய் இருந்தும் தூரத்தில் அவன்...
அறிந்தும் புரியாமல் அவள்...
பாலைவனத்து புறாக்கள் அவர்கள்..
பிரிக்கும் கள்ளிச் செடிகள் அவர்களைச் சுற்றி...
தனிமையின் வாசலில் தன்னந்தனியே ஒருவன்...
வாழ்க்கையின் சூழ்ச்சியின் குழப்பத்தில் ஒருவள்..
வட்டம் போல் சிலவற்றிற்குத் தொடக்கமே முடிவாய்.....
No comments:
Post a Comment