தமிழா!!!
விடிந்தால் ஆதவனையா கண்டாய்!!!
படத்தின் மிதல்லவா மோகம் கொண்டாய்!!
உறக்கத்தில் கனவில் மிதந்தாய்,
விடிந்தும் ஏனடா படக்கனவில் மிதந்தாய்...
நண்பா!!
வெள்ளி தோறும் கோவில் போன காலம் போனதே,
வெள்ளியிலும் வெள்ளித்திரை உனை சூழ்ந்ததே!!!
வன்முறை கலாச்சாரம் எங்கு கற்றாய்?
தமிழ்படத்தில் தானடா கண்டாய்...
தோழா!!!
ஆயிரம் படைகளுடன் சூழ நீ நாயகன் அல்ல...
நாயகன் மயக்கத்தில் இருந்தால் உன் வீட்டில் சோறு இல்ல...
உன் பொழுதைப் போக்கத் தான் படம்....
உன் பொழுதையே போக்க அல்ல...
No comments:
Post a Comment