பிறக்கும் போது சிரிக்க வைத்தவன் மனிதன்...
போகும் போது சிரிக்க வைக்காதவனும் மனிதன்..
காலத்தின் கணக்கில் கேள்விக்குறியாய் பிறந்தோம்.
நேரம் வந்தபின் முற்றுப் புள்ளியாய் மறைந்தோம்..
கேள்விக்குறி வாழ்க்கைக்கு நீ தரும் பதில்,
உன் இறப்பன்று தெரியும்..சிந்தும் கண்ணிர்களே!!!
மண்ணில் நீ தஞ்சமிக்கும் போது
மக்களின் மனதிலும் தஞ்சமிக்க வேண்டும்..
விதை மண்ணில் புதைந்தாலும்,
விருட்சம் விண்ணை தொடுகிறதே!!!
மனிதா!!!
நீ செல்லும் வாழ்க்கைப் பாதையில்
வைக்கும் ஒவ்வொரு அடியும்..நிலத்தில் மட்டுமல்ல,
மனதிலும் தடம் பதிக்க வேண்டும்..
No comments:
Post a Comment