நம் கல்லரையில் விழுந்த கடைசி
பூவும் நம் கதை சொல்லுமே!!
மரபணுவில் உதித்து கல்லரையில்
தானடா தஞ்சம்!!
வாழ்வில் நமக்கென்ன பஞ்சம்?
வேண்டுமடா சிந்தனையில்
சில விருச்சம்.....
உன் பிறந்த நாளில் நிறைய சிரித்தாய்
ஏனடா அழ மறுத்தாய்?
பிறந்த நாள் உன் இறந்தக் காலம்,
இறப்பு நாள் உன் எதிர்க்காலம்.
இறப்பை நோக்கியே நம் பயணம்..
அணுதினமும் வாழ்வில் சோதனைகள் ஆயிரம்,
சிரித்தால் போய்விடும்,
"வள்ளுவன்" வாக்கு பொய்க்காது,
உணர்ந்தவன் வாழ்க்கை அழியாது...
பஞ்சணையில் உறக்கம்
பெண்ணனைக்க ஏக்கம்,
என நிலைக்கெட்டு நீயும் திரியாதே!
பிறர் பழிக்க நீ வாழாதே!!!
கணக்கு ஒன்று உள்ளதே,
அது காலத்தின் கையில் இருக்குதே,
விடைப்பெறும் நேரம் வரும் போது
உன் கணக்குகள் இங்கு தீருதே!!!
உன் கல்லரையில் உதிரும் கடைசிப் பூவிதலும் உன் கதை சொல்லும்...
No comments:
Post a Comment