பூவும் மனிதனும் ஒன்றுதான்!
இன்று இறுதி நாள் என்று தெரிந்தால்
பூவும் வதங்கியே மலரும்...(மலருமா?)
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
காலையில் விழித்தவன் விழித்தவன் தான்..
உனை சூழ்ந்திருக்கும் வானம், காற்று, நீர், நெருப்பு, மண்
யாவும் சூன்யப்படும்.
புவியில் நீ மட்டும் தனிமை சிலுவை அரையப்படுவாய்!
பசித்தும் புசிக்க மறந்திருப்பாய்,
விழித்தே நீ உறங்கிருப்பாய்,
அருந்தும் சலமும் நஞ்ஜென உணர்ந்திருப்பாய்,
ஏன் சுவாசிக்கவே வெறுத்திருப்பாய்.
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
நண்பனும் அந்நியப்படுவான்,
உடன் பிறப்புகள் பெயர் மறப்பாய்,
தாய் தந்தையின் கைப்பிடி தளர்வதாய் உணர்வாய்!!!
அன்று மட்டும் வாழ்வை அதிகம் வெறுத்திருப்பாய்,
இன்னும் ஒருநாள் வாழத் துடித்திருப்பாய்...
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
ஆத்திகனா நீ நாத்திகன் ஆவாய்,
நாத்திகனா நீ ஆத்திகன் ஆவாய்.
கடவுள் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அன்றுதான்...
நீ கண்ணிமைக்கும் கணங்களை எண்ணியிருப்பாய்,
உன் கண் மயிர் உதிர்வதையும் கணக்கெடுப்பாய்...
சிறு ஒசைக் கேட்டு அதிர்ந்திருப்பாய்
நித்தம் ஒரு கணம் இறந்திருப்பாய்....
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
இறப்பு உனக்கு இயல்புதான்
அந்த நாள் தெரியாதவரை.....
No comments:
Post a Comment