மனிதனின் படைப்பு; இறைவன் வரைந்த சித்திரம்,
மனிதர்கள் பல வர்ணம், குணம், திறன், வடிவங்களை
கொண்டிருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதானே!!
வலித்தால் அழுவான்,
மகிழ்ந்தால் சிரிப்பான்,
காதலித்தால்?
அழுதுக் கொண்டே சிரிப்பான் மனிதன்...
மூளையில் இருபக்கம் போல்
காதலுக்கும் இன்பம், துன்பம் என இருபக்கம்.
அமைதியாய் இரு ஞானியாவாய்,
மகிழ்ச்சியாய் இரு இளமையாவாய்..
காதலித்திரு இளமையில் நீ ஞானியாவாய்.
வள்ளுவனின் காதல் காவியத்தில்
அமராவதியின் காதல் கல்லரையில்
மண்ணில் கரைந்தாலும் நினைவில் உயிர்
வாழ்வது காதல் மட்டுமே!!
நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் போல்
காதலையும் கட்டுக்குள்,
அடைக்க முடியாது; அடக்கவும் முடியாது..
பிரபஞ்சத்தில் மறைந்து வாழும் ஆறாம் பூதம் காதல்தான்...
அணுவிலிருந்து உதித்தவன் மனிதன்,
எதிலிருந்து உதித்தது காதல்?
அன்பே சிவம் என்று கூறுவது இதைத்தானோ???
இறைவன்=காதல்
ம்ம்...இல்லை!! இல்லை!! நாத்திகன் இதை எதிர்ப்பானே!!
பிறகு காதலின் பிறப்பை எப்படி அறிவது; கூறுவது?
ஹொர்மோனின் சூழ்ச்சி என்கிறான் நாத்திகவாதி..
எது எப்படியோ காதல் உணர்வதற்கு மட்டுமே விமர்சிக்கப்படுவதற்கல்ல...
காதலின் அவதாரங்கள் பல..
ஆண் பெண் கொண்டது மட்டுமல்ல காதல்..
தகப்பன் மகன் உணர்விலும் வாழும் காதல்...
பெற்ற பந்தங்களை கடந்து
உற்ற நண்பன் வரை தொடரும்...
உறவுகள் என்றும் நம்மை தொடர்வதில்லை...
மனிதர்கள் மேல் நாம் கொண்ட அன்பே நம்மை கடைசி வரை
சூழ்ந்து வரும்..வாழும் காலத்தில் நீ மக்களின் மனதில்
விதைத்த அன்பின் விதையே!!
உன் கடைசி தருணத்தில் கண்ணீராய் சிந்தப்படும்....
No comments:
Post a Comment